Q: கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒரு கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொள்ள மறந்தால், அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது எத்தனை மாத்திரைகள் தவறியுள்ளன மற்றும் எப்போது நினைவுக்கு வந்தது என்பதைக் பொறுத்தது. பொதுவாக, மறந்த மாத்திரையை நினைவுக்கு வந்தவுடன் உடனடியாக எடுத்துக்கொண்டு, அடுத்த மாத்திரையை வழக்கமான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகள் தவறியிருந்தால், உங்கள் மாத்திரை தொகுப்புடன் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் அல்லது மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Bloom by FPA Sri Lanka-ஐ தொடர்புகொள்ளுங்கள் – 077 955 2979
Q: நான் ஒரு வேளை மருந்தை எடுக்கத் தவறினால் கூடுதல் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்த வேண்டுமா?
ஆம், சில சந்தர்ப்பங்களில் தேவைப்படலாம். நீங்கள் மாத்திரைகளை தவறவிட்டாலோ அல்லது கருத்தடை ஊசி (Injection) அல்லது பிற கருத்தடை முறைகளில் தாமதம் ஏற்பட்டாலோ, தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதிப்படுத்த சில நாட்களுக்கு ஆணுறை அல்லது வேறு ஒரு கூடுதல் கருத்தடை முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
Q: கருத்தடை ஊசியை (Injection) பெற தவறிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ஊசி பரிந்துரைக்கப்பட்ட காலத்தை விட தாமதமாகிவிட்டால், விரைவில் ஒரு சுகாதார நிபுணரைத் தொடர்புகொள்ளுங்கள். தாமதமானாலும் அதை பெற முடியும், ஆனால் எவ்வளவு தாமதமாகியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படலாம்.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Bloom by FPA Sri Lanka-ஐ தொடர்புகொள்ளுங்கள் – 077 955 2979
Q: நான் ஒரு வேளை மருந்தை எடுக்கத் தவறி, பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
இப்படியான சூழ்நிலையில், போஸ்டினோர்(Postinor) போன்ற அவசரகால கருத்தடை மாத்திரைகள் (Emergency Contraception) பயன்படுத்தக்கூடிய ஒரு முறையாக இருக்கலாம். உங்கள் விருப்பங்களைப் புரிந்துகொள்ள, கூடிய விரைவில் ஒரு சுகாதார வழங்குநரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
மேலதிக தகவல்களுக்கு: https://www.fpasrilanka.org/en/emergency-contraceptives
Q: நான் ஒரு வேளை மருந்தை எடுக்கத் தவறினால் எனது கருத்தடை முறையை நிறுத்த வேண்டுமா?
இல்லை. மருத்துவ ஆலோசனையின்றி உங்கள் கருத்தடை முறையை நிறுத்தக்கூடாது. திடீரென நிறுத்துவது கருத்தடைக்கான பாதுகாப்பைக் குறைக்கலாம். அதற்கு பதிலாக, உங்கள் கருத்தடை முறையைத் தொடரவும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆலோசனை பெறவும்.
Q: எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?
பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு சுகாதார நிபுணரைத் தொடர்புகொள்ள வேண்டும்:
ஒரு வேளை மருந்தை உட்கொள்ளத் தவறிய பிறகு என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால்
நீங்கள் பல மாத்திரைகளை அல்லது மருந்து அளவுகளைத் தவறவிட்டால்
நீங்கள் வழக்கத்திற்கு மாறான பக்க விளைவுகள் அல்லது அறிகுறிகளை அனுபவித்தால்
கர்ப்பம் தரிக்கும் அபாயம் குறித்து கவலை இருந்தால்
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Bloom by FPA Sri Lanka-ஐ தொடர்புகொள்ளுங்கள் – 077 955 2979
Q: எதிர்காலத்தில் மருந்தளவுகளை தவறவிடாமல் இருப்பது எப்படி?
தினசரி நினைவூட்டல்களை அமைப்பது, அதை ஒரு வழக்கமான செயலுடன் இணைப்பது, அல்லது உள்வைப்புகள் (Implant) அல்லது IUD போன்ற நீண்டகால கருத்தடை முறைகளைத் தேர்வு செய்வது மருந்தளவுகளை தவறவிடும் வாய்ப்பைக் குறைக்க உதவும்.
Q: நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் என்ன?
ஒரு வேளை மருந்தை உட்கொள்ளத் தவறுவது பொதுவானதும் சமாளிக்கக்கூடியதுமான ஒரு விடயமாகும். விரைவாக நடவடிக்கை எடுப்பதும், பதற்றப்படாமல் இருப்பது மற்றும் சந்தேகம் இருந்தால் சரியான வழிகாட்டலைப் பெறுவதுமே முக்கியமானதாகும்.