வாய்வழி கருத்தடை மாத்திரை | The Family Planning Association of Sri Lanka

வாய்வழி கருத்தடை மாத்திரை

வாய்வழி கருத்தடை மாத்திரை (பெரும்பாலும் "மாத்திரை" என்று குறிப்பிடப்படுகின்றது) தினமும் எடுக்கப்பட வேண்டும். இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது, மற்றும் சுயமாக நிர்வகிப்பதற்கு உங்களுக்கு பாதுகாப்பானது. எந்த மருந்தகத்திலும் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

மாத்திரை ஒரு மிகவும் பயனுள்ள முறையாகும் அத்தோடு வலியான மற்றும் கனமான மாதவிடாயையும் குறைக்கின்றது, மற்றும் நீங்கள் அதை எப்பொழுது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

In this section :

1. பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் கர்ப்பத்தை எவ்வாறு தடுக்கின்றன?

2. Does the pill protect against STDs?

 

1. பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் கர்ப்பத்தை எவ்வாறு தடுக்கின்றன?

 

ஒரு முட்டையுடன் விந்தணு சேர்வதை தடுப்பதன் மூலமே பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை செயற்படுகின்றது. விந்தணு முட்டையுடன் சேர்கின்ற பொழுது அது கருத்தரித்தல் என்று அழைக்கப்படுகின்றது.

மாத்திரையிலுள்ள ஹார்மோன்கள் அண்டவிடுப்பை பாதுகாப்பாக நிறுத்துகின்றன. கருவுறுதல் இல்லை என்றால் கருவுறுவதற்கு விந்தணுவுக்கு முட்டை இருக்காது, எனவே கர்ப்பம் தரிக்க முடியாது.

 

2. மாத்திரையானது எஸ்டிடி(STDs) களிலிருந்து பாதுகாக்குமா?

 

இல்லை. மாத்திரை கர்ப்பத்தை தடுப்பதில்  மிகவும் நல்லது, ஆனால் அது பாலியல் ரீதியாக பரவுகின்ற தொற்றுக்களிலிருந்து உங்களை பாதுகாக்காது.

நீங்கள் உடலுறவு கொள்கின்ற ஒவ்வொரு தடவையும் ஆணுறைகளை பயன்படுத்துவது, எஸ்டிடி(STDs) களை பெறுவதற்கான அல்லது பரப்புவதற்கான உங்களுடைய வாய்ப்புக்களை குறைக்கின்றது. ஆணுறைகள் கர்ப்பத்திலிருந்தும் பாதுகாக்கின்றன - எனவே ஆணுறைகளை + பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை ஒன்றாக பயன்படுத்துவது எஸ்டிடி(STDs) களிலிருந்து மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றது.

 

 
மாத்திரை பற்றி மேலும் இங்கே கற்க: http://www.fpasrilanka.org/content/mithuri-ocp

 

 

Other Topics:

கருத்தடை ஊசி

ஆணுறைகள்

உள்வைப்பு

வாய்வழி கருத்தடை மாத்திரை

ஐயூடி (IUD)


 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By