இலங்கையில் 2017ஆம் ஆண்டு விஸ்வ ஆவர்த்தன மீளாய்வு நடைமுறைக்கு உதவுதல் | The Family Planning Association of Sri Lanka

இலங்கையில் 2017ஆம் ஆண்டு விஸ்வ ஆவர்த்தன மீளாய்வு நடைமுறைக்கு உதவுதல்

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் என்பவற்றுடன் தொடர்புடைய விஸ்வ ஆவர்த்தன மீளாய்வு நடைமுறைக்கு உதவுவதற்கு ஒரு சிறிய மானிய கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விஸ்வ ஆவர்த்தன மீளாய்வு (UPR) ஓர் அபூர்வ நடைமுறையாகும். இது அனைத்து ஐ.நா அங்கத்துவ அரசுகளின் மனித உரிமை அறிக்கைகளை மீளாய்வு செய்கிறது. UPR அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற நடைமுறையாகும். இது மனித உரிமைகள் பேரவையின் கீழ் இருக்கின்றது. இது ஒவ்வொரு அரசும் தமது நாடுகளில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களுடைய மனித உரிமைகள் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பமளிக்கிறது. சபையின் பிரதான விடயம் என்றவகையில், மனித உரிமை நிலைகளை மதிப்பீடு செய்கின்றபோது ஒவ்வொரு நாடும் சமமாக நடத்தப்படுகின்றது என்பதை உறுதிசெய்தவற்கு UPR வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவொரு கூட்டுறவு நடவடிக்கை முறையாகும். இதில் ஒக்ரோபர் 2011 ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இருக்கின்ற பொறிமுறையாகும். இதைப்போன்ற பொறிமுறைகள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. சபையின் பிரதான மூலக் கூறுகளில் இந்த UPR ஒன்றாகும். இது மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் ஒவ்வொரு அரசுக்கும் உள்ள பொறுப்பை முழுமையாக மதிப்பதற்கும் ஞாபகப்படுத்துகிறது.
இந்த மீளாய்வின் நோக்கம் வருமாறு:

 

  1. கீழ்மட்டத்தில் உள்ள மனித உரிமை நிலைகளை மேம்படுத்துதல்.
  2. அரசின் மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுதல் மற்றும் அரசு எதிர்நோக்கியுள்ள சவால்களையும் ஆக்பூர்வமான அபிவிருத்தியையும் மதிப்பீடுசெய்தல் மற்றும் அதில் ஈடுபடுதல்.
  3. அரசு கவனம் செலுத்துகிற நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவர்களின் சம்மதத்துடன் அரசின் தொழில்நுட்ப உதவியையும் அரச கொள்ளளவையும் ஆரம்பித்தல்.
  4. அரசுகளுக்கிடையிலும் ஏனைய பங்கீடுபாட்டாளர்களுக்கிடையிலும் நல்ல செயல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
  5. மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஒத்துழைப்பு நல்குவதற்கு உதவுதல்.
  6. பேரவை, ஏனைய மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலவலகம் என்பவற்றுடன் முழு ஒத்துழைப்புடனும் ஈடுபாட்டுடனும் இருப்பதை ஊக்கப்படுத்துதல்.
  7. மனித உரிமைகள் பேரவையின் (இதனகத்துப் பின்னர் 'பேரவை') தேர்தலுக்கு வேட்பாளர்களை முன்வைக்கும்போது அதைப் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் உட்பட, அரசின் ஈடுபாடும் தன்னார்வ பணியும்.

பால்நிலை விடயங்களை முழுமையாக ஒருங்கிணைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தேசிய மனித உரிமை நிறுவகங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் உட்பட தகுதியான பங்கீடுபாட்டாளர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மீளாய்வு பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது:

  1. ஐக்கிய நாடுகள் சமவாயம்.
  2. மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக பிரகடனம்.
  3. அரசு பங்காளராக இருக்கின்ற மனித உரிமை உபகரணங்கள்.
  4. மனித உரிமைகள் பேரவையின் தேர்தலுக்கு வேட்பாளர்களை முன்வைக்கும்போது அதைப் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் உட்பட அரசின் ஈடுபாடுகொண்டவர்களின் பணி.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By